புதன், 6 ஜூலை, 2011

இதில் என்ன இருக்கும் நிச்சயம் எனக்கு தெரியாது...

"ஒரு வழிப்போக்கன் தான் போகும் இடத்தை அறியமாட்டான் ஆனால், செல்லும் வழியை அறிவான் அது போல் தான் நானும்... "

இலக்கியத்துடன் எழுத நான் இலக்கியவாதி அல்ல;

கோர்வையாக எதுகை, மோனையுடன் எழுத எழுத்தாளனும் அல்ல;

கரகோஷம் வாங்க பேசும்,எழுதும் அரசியல்வதியும் அல்ல...

உழைப்பாளியின் வியர்வைகளில் உயரும் வணிகனும் அல்ல..

மக்களிம் அச்சத்தை பயன்படுத்தும்
போலிமதவாதியும் அல்ல..

அதற்காக, நான் நாத்திக வாதியும் அல்ல..

எதுவும் நான் இல்லை என்றால் பின் நான் யார்?

தேடலிம் விடை தான் என்ன?

இதோ நான் யார் கண்டு பிடிக்க சிறு குறிப்பு

" நான் ஒரு வழிப்போக்கன் சற்று இளைப்பாற ஓர் உடலை தேர்ந்து எடுத்து இப்போது உங்களுடன் உங்களுக்காக எழுதுகிறேன் எழுதபோறேன்... "

உங்கள் கண்களுக்காக வழிபோக்கனாய்

உங்கள் எண்ணங்களுக்கு எட்டாத விழி பொயயனாய்

உங்கள் அனைவருள்ளும் மெய்யின் மெய்யாய்

இருக்கும் நான் மட்டுமே உண்மை ஆன்மா

இதில் என்ன இருக்கும்... எதுவும் இருக்கும்...

நடுநிலையுடன்....

யாரையும் புண்படுத்த அல்ல ; நம்மை பண்படுத்த...

பொழுதுபோக்கு அல்ல ; பழுது பார்க்க...

என்கருத்துகள் தீர்வை தருவதல்ல.. பார்வையை தர....

வாருங்கள் இந்த வழிபோக்கனுடன் பயணியுங்கள்....

கருத்துகள் இல்லை: