புதன், 6 ஜூலை, 2011

ஒரு காட்டில் வேடன் மற்றும் அவனின் மனைவி - ஒரு வயது குழந்தையும் வசித்து வந்தார்கள்..

வேடனுக்கு ஒருநாள் விலங்குகளே கிடைக்கவில்லை அவனும் பசி குடிசையில் மனைவி-குழந்தையும் பசி ... என்ன செய்வது என்று தெரியாமல் மரத்தின் மீது ஏறி பார்த்துகொண்டு இருந்தான் இரைக்காக!

மான்கள் கூட்டம் ஒன்று தண்ணீர் குடித்து விட்டு சென்று கொண்டு இருந்தது அப்போ தாய், மான் குட்டிகளை வழி மாறாமல் இருக்க அதட்டி கொண்டே போனது. அதில், ஒரு மான் மட்டும் தாய் சொல்லை காதில் போடாமல் வழி மாறியது...
அந்த மான் வருவதை வேடன் பார்த்துவிடுகிறான் அம்பை விடுகிறான் குறி தவறி விடுகிறது..
மான் ஓடுகிறது..
வேடன் துரத்துகிறான்..
நேரம் போகிறது..
மானுக்கு உயிர் மீது பயம் ஓட்டம்.. வேடனுகோ பசி தன் குடும்பமோ பசியால் உள்ளது பசி போக்க மான் வேண்டும் என்கிற ஓட்டம்..மானோ ஒரு புதரில் மறைந்தது.. வேடன் தேடுகிறான்.. அங்கே முனிவர் தவம் கோலத்தில் தியானம் பண்ணுகிறார். வேடன் அவரிடம் கேட்கிறான் அவரோ மௌனமாக இருக்கிறார்.. மானோ நிம்மதி அடைகிறது உடனே அந்த புதரில் இருண்ட கீரிப்பிள்ளை தன் எதிரி தான் இது என்று நினைத்து கத்துகிறது அதுக்கு அச்சம் கொண்டு மான் வெளிய வருகிறது.
வேடன் அந்த மானை கொள்கிறான்..

இந்த கதை பாவம் என்ற தலைப்பில் சொன்னானே அதுக்கு அல்ல; அடுத்த தலைப்பான விதி-சூழ்நிலை-காலம் முன்னோட்ட கதை ஆகும்.




கருத்துகள் இல்லை: