மனம்"கருமேந்திரம் - பஞ்ச்ஜெந்திரம் மூலமாக ஆட்பட்டு,உட்பட்டு
செயல்படுவது" தன்னையே அறிந்து கொள்ளாத வரை இதனால்
ஆன்மாவானது மீண்டும் மீண்டும் பிறப்புகளை எடுக்கிறது. அதாவது,
நாம் ஒரு பாதையில் தொடர்ந்து செல்கிறோம் அந்த பாதையில்
ஒருகடை உள்ளது நாம் முதல் இரண்டு மூன்று நாட்கள் செல்கிறோம்
அப்போ நம்முடைய மூக்கு வாசம் பிடிக்கும் நேராக மனம் சென்றடையும்..
மற்றொரு நாள் கண்கள் காணும் அப்போ நல்ல வரு வருணு
முரு முருனு சிகப்பா ஒரு மீன் ஒன்று பொரிக்கபட்டு இருக்கும் உடனே
மனம் கேட்கும் என்ன இது? புத்தி(அறிவு) சொல்லும் இது மீன் பொரிக்க
பட்டுள்ளது என்று. இங்கே மனம் எப்படி செயல்படுன்னு தெரிந்து இருக்கும்.
மேற்கண்ட உதாரணம் கண்,மூக்கு உதவியால் மனம் வசீகரிக்க பட்டது ..
பின் அந்த பாதை வழியாக நாம் செல்லும் போதெல்லாம் இதுவே
பழக்கமாகும்.
சில நேரங்களில்...
மனம் சொல்படி கருமேந்திரம் - பஞ்ச்ஜெந்திரம் செயல்படுகிறது இது
எப்போ நிகழ்கிறது என்றால் நாம் பிறப்புகள் - இறப்புகளை சந்தித்து
வந்துள்ளோம் அதன் மூலமாக நமக்கு பூர்வ ஜென்ம அனுபவங்கள் /
வசங்கள் நம் கர்ம பதிவுகளில் பதிந்து இருக்கும்.
ஒவ்வொரு வயதிலும் ஒரு தேடல்கள் நமக்கு வருகிறது யார்
சொன்னாலும் சொல்லாமல் போனாலும் அந்த தேடல்களில்நமக்கு ஒரு
ஈர்ப்பு வருகிறது அதன் மூலமாக மனம் மற்ற இரண்டையும்
ஆள்கிறது. அடுத்து நாம் காண இருப்பது புத்தி/அறிவு.. ( அனைதையு நாம்
சுருக்கமாக காண காரணம் நமக்கு முக்கியமானது இப்போ இவைகள்
அல்ல மரணம். பின்வரும் காலத்தில் இவைகளை விரிவாக காண்போம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக