புதன், 20 ஜூலை, 2011

1 .6A மனம்

மனம்"கருமேந்திரம் - பஞ்ச்ஜெந்திரம் மூலமாக ஆட்பட்டு,உட்பட்டு

செயல்படுவது"  தன்னையே அறிந்து கொள்ளாத வரை இதனால்

ஆன்மாவானது மீண்டும் மீண்டும்  பிறப்புகளை எடுக்கிறது. அதாவது,

நாம் ஒரு பாதையில் தொடர்ந்து செல்கிறோம் அந்த பாதையில்
ஒருகடை உள்ளது நாம் முதல் இரண்டு மூன்று நாட்கள் செல்கிறோம்

 
அப்போ நம்முடைய மூக்கு வாசம் பிடிக்கும் நேராக மனம் சென்றடையும்..

 
மற்றொரு நாள் கண்கள் காணும் அப்போ நல்ல வரு வருணு

முரு முருனு சிகப்பா ஒரு மீன் ஒன்று பொரிக்கபட்டு இருக்கும் உடனே

மனம் கேட்கும் என்ன இது? புத்தி(அறிவு)  சொல்லும் இது மீன் பொரிக்க

பட்டுள்ளது என்று. இங்கே மனம் எப்படி செயல்படுன்னு தெரிந்து இருக்கும்.

மேற்கண்ட உதாரணம் கண்,மூக்கு உதவியால் மனம் வசீகரிக்க பட்டது ..

பின் அந்த பாதை வழியாக நாம் செல்லும் போதெல்லாம் இதுவே

பழக்கமாகும்.

சில நேரங்களில்...

மனம் சொல்படி கருமேந்திரம் - பஞ்ச்ஜெந்திரம் செயல்படுகிறது இது

எப்போ நிகழ்கிறது என்றால் நாம் பிறப்புகள் - இறப்புகளை சந்தித்து

வந்துள்ளோம் அதன் மூலமாக நமக்கு பூர்வ ஜென்ம அனுபவங்கள் /

வசங்கள் நம் கர்ம பதிவுகளில் பதிந்து இருக்கும்.

ஒவ்வொரு வயதிலும் ஒரு தேடல்கள் நமக்கு வருகிறது யார்

சொன்னாலும் சொல்லாமல் போனாலும் அந்த தேடல்களில்நமக்கு ஒரு

ஈர்ப்பு வருகிறது அதன் மூலமாக மனம் மற்ற இரண்டையும்

ஆள்கிறது. அடுத்து நாம் காண இருப்பது புத்தி/அறிவு.. ( அனைதையு நாம்

சுருக்கமாக காண காரணம் நமக்கு முக்கியமானது இப்போ இவைகள்

அல்ல மரணம். பின்வரும் காலத்தில் இவைகளை விரிவாக காண்போம்)



ஞாயிறு, 17 ஜூலை, 2011

1.5 சர்வ முக்தி



இந்த அட்டவணையை கையில் வைத்து கொள்ளுங்கள்..

இனி  வருபவைகள் புரிய இவைகள் உதவும்.. இது மிக 


எளிய முறையில் தயாரிக்க பட்டுள்ளது.

இப்போ முதல் வேலை நாம் மனம் - புத்தி- சித்தம்

ஆகியவற்றை அறிந்துகொள்வோம் அப்பொழுதான் மரணத்தை 


புரிந்துகொண்டு என்னுடன் பயணிக்க முடியும்...




வெள்ளி, 15 ஜூலை, 2011

1 .4 அண்டமும் பிண்டமும்

அண்டமும் பிண்டமும் என்பது உலகமும் உடலும் என்பதன் பொருள் 

அடங்கியதாகும்.. உலகத்தில் உள்ள எங்கும் பரந்து விரிந்துள்ள 

பஞ்சபூதன்களான  தீ,நீர்,நிலம்,வாயு,ஆகாயம் இவைகளே நமது உடலிலும் 

அணுக்களிலும் நிறைந்து உள்ளது. உலகில் எந்த பொருள் ஆனாலும் 

சடப்பொருள்  ஆனாலும் அதற்குள் ஆற்றல் உள்ளது. உலகின் மத்தியில் 6000 

செல்சியஸ் அளவு தீ கொழுந்து விட்டு எரிகிறது  அதனால் தான் உலகம் இன்று

தொடர்ச்சியாக நீ வட்ட பாதையில் பூமி சுழந்துகொண்டு உள்ளது ( என்ஜினை 

போல). அதே போல், நமது உடலின் மத்தியிலும் தீயானது எரிந்துகொண்டு 

உள்ளது அதனால் தான் நமது உடல் சக்தியை பெற்றுக்கொண்டு இயங்குகிறது 

வடவகனி என்ற பெயரில். இதனால், தான் உயிர்களுக்கு விந்துநாதம் உற்பத்தி 

ஆகிறது. இது போல் உலகில் என்னென்ன நிகழ்வுகள் நிகழ்கிறதோ அதுபோல் 

நமது உடலிலும் அண்ட  நிகழ்வுகள் நடக்கிறது. மரணம் 100 சதவீதம் இயற்கை  

வடிவை சார்ந்தது ( மரணத்தின் பொது உயிர் நிலையை சொன்னேன் தவிர 

மரணத்தின் காரணத்தை கூறவில்லை)
 1 .3 .தியானம் ஒரு சிறு பார்வை

என்றும் அனைத்துக்கும் இவனின் குருவான முருக பெருமானுக்கும்

யோகத்தின் குருவான என் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி க்கும்

பாதங்கள் தொட்டு வணங்கிக்கொண்டு தியானம் பார்வை தருகிறேன்

தியானத்தை விளக்க நினைப்பது பால்வெளியில் உள்ள நச்சத்திரம்

கூட்டத்தை  எண்ணுவதற்கு  சமமாகும். எனவே நமக்கு தேவையானதை

மட்டும் எடுத்து கொள்வோம்  தியானம் என்பது :


எண்ணம் - எண்ணபடுபவன்-எண்ணுபவன் ஒன்றென உணர்வதாகும்

தியானத்தை பற்றி நான் சொல்வதை விட..  பகவான் கிருஷ்ணர்

சொல்வதை ..

கேளுங்கள் ...

"ப்ப்ரயண்ட்தமனஷம் ஹி ஏஷம் யோகிநம் ஷுகம் உத்தமம்

உபைதி யான்றஜஷம் ப்ரஹம் பூதம் அகல்மஷம் "

பொருள் : நிலையான மனம் உடைய யோகி ஒருவனுக்கு பாவங்கள் நீங்கள்

பெற்று ஆத்மா அனுபவம் என்ற சுகம் ஏற்படுகிறது. அவனது ரஜோ குணம்

விலகுகிறது இதனால் அவன் ப்ரம்ம நிலையை அடைந்து விடுகிறான்  ப.கீ.6 -29

நிலையான மனம் அடைய வேண்டும் என்றால் அது தியானத்தால் மட்டுமே

சாத்தியம். அதுமட்டுமல்ல, தியானத்தை  தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே

சர்வம் இறை மயமாக காணமுடியும்.

"யோ மாம் ப்யாதி சர்வத்ர சர்வம் ச மயி பஷ்யதி

தஷ்யஹம் ந ப்ப்ரனஷ்யாமி ஸ ச மே ந ப்ப்ரனஷ்யதி "

பொருள் : என்னை எங்கும் எதிலும் காண்கிறானோ, என்னில் அனைத்திலும்

காண்கிறானோ அப்படிப்பட்ட ஒருவனை நான் கைவிடுவதில்லை , அவனும்

என்னை கைவிடுவதில்லை .( இப்படியாக வாழ்ந்து வருபவன் கூட நான் irupen ) (ப.கீ.6 - 30 )(31 )

தியானம் மனதை மட்டுமா ஒருநிலை படுத்தவில்லை உங்கள் 
 
உடலையும் உறுதி படுத்துகிறது.

தியானத்தால் :

"அழியக்கூடிய

வாழ்கையின் தடைகள்

அகற்றப்படும்போது

அழிவற்ற ஒரு வாழ்க்கை நமக்கு

கிடைத்துவிடுகிறது " ( பதஞ்சலி யோகா சூத்ரம் 1:29 )

தியானத்தை சொல்ல நிறைய முக்கியமான விஷயங்கள் உள்ளது, 
 
அதை நாம் இப்போ காண முடியாது

என்னுடன் பயணித்து வாருங்கள் சொல்கிறேன்...
 
பதஞ்சலியார் சொன்னதை மனதில் நிறுத்தி  என்னுடன் 
 
பயணம் தொடருங்கள் ..

 

வியாழன், 14 ஜூலை, 2011

1.2 . தச வாயுக்கள் ஒரு அறிமுகம் :

நமது உடம்பில் தச வாயுக்களின் செயல்கள்

1 . பிராணன் : மேல் நோக்கிய இயக்கம்

2 . ஆபணன்   : கீழ் நோக்கிய இயக்கம்

3 . வியனன் :எல்லா பக்க இயக்கம்

4 . உதானன் : மாறன் வேளையில் ஜீவன் வெளியேற உதவும்

5 . சாமனன் : உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றும்

6 . நாகன் : வாந்தி, ஏப்பம்

7 . கூர்மன் : கண் இமைகளின் இயக்கம்

8 . கிரிகரன் : பசி

9 . தேவதத்தன் : கொட்டாவி

10 . தனஜ்ஜெயன் * : உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும்

இன்னும் நெறைய விஷயங்களை இந்த வாயுக்கள் செய்கிறது அதை

கொஞ்சம் கொஞ்சமாக  இந்த வழிபோக்கன் விளக்குவான் ...

கவனமாக படியுங்கள் புரியவில்லை என்றால் கேளுங்கள் இனி

வருபவைகளுக்கு இவைகளே மூலம்

1. 96 தத்துவங்கள்

1.1. 96 தத்துவங்கள்

1. பஞ்சபூதங்கள்
:5


1 .பிருதி  2 . அப்பு  3 . தேயு   4 . வாயு   5 . ஆகாயம்

2 . பஞ்சபூதங்களின் காரியக்கூருகள் :(25 ) 


1 .பிருதி : மயிர்,தோல்,எலும்பு,நரம்பு,தசை


2 .அப்பு: நீர்,உதிரம்,மூளை,நிணம்,சுக்கிலம்(விந்து)


3 .தேயு:ஆகாரம்,நித்திரை,பயம்,மைதுனம்,சோம்பல்


4 .வாயு:ஓடல்,இருத்தல்,கிடத்தல்,நடத்தல்,தத்தல்


5 .ஆகாய:குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மாத்சரியம்

3 .பஞ்ச்செந்தீரம் : (புலன்) (5 )


மெய் , வாய்,கண்,மூக்கு, செவி

4 .தன்மாத்திரை ( புலன்களின் ஊடுக்கம்) : 5

 
ஓசை,ஊறு,ஓளி,சுவை,நாற்றம்

5 . கருமேந்தீரம் : 10 

 
கண் - 2 , காது - 2 , வாய்-1 , மூக்கு - 1 , கை - 2 , கால் - 2

6 . வாசல்கள் : 11 


கண், காது, நாசி துவரம், (3 * 2 )= 6  

வாய்,குயம்,புயம்,தொப்புள்,பிரம்மேந்திரம் ( 5 * 1 ) = 5

7 . அந்தகரன் : 4 

 
மனம் , புத்தி, சித்தம், அகங்காரம்

8 . குணம் : 3 


தமோ, ரஜோ, சாத்விகம்

9 . வாக்கு : 4


10 . ஈஷனை : 3

11 . வாயுக்கள் : 10 


பிராணன், அபானன் , வியனன், உதணன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், 


தேவதத்தன்,தனஜ்ஜெயன் 

12 . நாடிகள் : 10 


அத்தி,அலம்புடை,இடைகலை,பிங்கலை,சுழுமுனை,காந்தாரி,குகுதை,சங்கினி,சிகுவை,புருடன்

13 . புருடன் : 1 


( வாயுக்கள் , நாடிகள், புருடன்  பற்றி விரிவாக நான்காம் தலைப்பில் 


காண்போம்)

இவைகளே 96  தத்துவங்கள் ஆகும்.


மரணம் 1

மரணத்தை பற்றி நாம் அறிந்துகொள்வதுக்கு முன் சில விஷயங்களை நாம்
தெரிந்து கொள்ளவேண்டும். மரணம் என்பது புதுமனை புகு விழா ஆகும்.
சுகமா / துக்கம என்பதை யாரும் அறியார். ஆனால், மரணம் பின்னும்
பிறப்புக்கு முன்னும் என்ன நடக்கிறது என்பதை யாரும் அறியார் அதையே
இறைவனின்  5  வது   தொழிலான மறைத்தல்.
இதை நாம் அறிவியல் மூலமாகவும், ஆன்மிக மூலமாகவும் காண

இருக்கிறோம்.
1.1 . 96 தத்துவங்கள்
1.2 . தச வாயுக்கள் ஒரு அறிமுகம்
1.3 . தவம் ( தியானம்) ஒரு பார்வை
1.4 . பிண்டமும் அண்டமும்
1.5 . குறிப்புகள்
இவைகளை நாம் சிறு குறிப்பாக கண்டபின் நாம் மரணம் பற்றி அறிவோம்.

வியாழன், 7 ஜூலை, 2011

பாவம் 1

ஒருவன் பரம ஏழையாக மற்றொருவன் பணக்காரனாக.. இன்னொருவன் நடுத்தர வாழ்க்கை உடையவனாக அமைவது ஏன்? 
ஒரு தாயின் கருவில் பிறந்த இரட்டை குழந்தைகள் குட பண்பில்-அழகில்-அறிவில்-நிலையில் மாற்றம் ஏன்?
அனைத்து திறமை இருந்தும் ஜோளிக்காதவர்கள் பலர் ஓரளவு திறமை இருக்கும் ஆனால் ஜொலிப்பார்கள் ..
ஒருவன் தொட்டதெல்லாம் வெற்றி மற்றவன் தொட்டதெல்லாம் தோல்வி இந்த நிலை எப்படி?
மாபெரும் வெற்றி பெற்றவன் குட தீடீர் என தொடர் தோல்வி சந்திப்பார்கள்- சிலர் தோல்வியில் இருந்து மீண்டு சாதனை படைப்பார்கள். 
உயரங்களை காணாமல் துயரங்களில் உழுவார்கள் பலர்?
சிலருக்கு அனைத்தும் இருக்கும் ஆனால் மனதில் ஏதோ வருடல்-துன்பம்-சங்கடம்-இருக்கும் அவர்களுக்கே காரணம் தெரியாமல் துயரத்தில் வாழ்வார்கள் ஏன் உயிர்களுக்கு இந்நிலை ....
ஆழ்ந்து சிந்தித்தால் நமக்கு புலப்படும் உண்மை ஒன்று தான் 'நம்முடைய நிலைக்கு நாமே காரணம்' ஆனால் இந்த உண்மை புரியாமல் சிலர் கருணை பெருங்கடலான பரப்பொருளை தூற்றுவார்கள் இது அவர்களின் அறியாமையின் நிலையை காணவைக்கிறது.
என்றோ ஒருநாள் விதைக்கப்பட்ட விதைதான் இன்று மரமாக காட்சி தாருகிறது. அது போல என்றோ ஒரு நாள் நாம் செய்த வினைகள்தான் இன்று நம்முடன் விளையாடுகிறது. அந்த வினைகளே இன்ப-துன்பமாக காட்சி தருகிறது.
"நாம் அறிந்தோ - அறியாமலோ, புரிந்து-புரியாமலோ, சொல்லாலோ-செயலாலோ-எண்ணத்தாலோ மற்றவரின் உடலுக்கோ-உள்ளதுக்கோ-உயிருக்கோ துன்பம் விளைவிப்பது பாவமாகும் அதாவது தீயவினைகள்"
நீங்கள் கேட்கலாம் பாவங்களை செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?என்று.. 
நாம் பல பிறப்புகள் மூலமாக நம்மால்-நமக்குள் குவிக்கப்பட்டுள்ள வினைகளை ஒரேயடியாக அறுக்க முடியாது.ஆனால் மேற்கொண்டு பாவம் செய்யாமல் இருக்கலாம். 
நீங்கள் கேட்ட கேள்வியைத்தான் பரமாத்மா கிருஷ்ணரிடம்,அர்ஜுனன் கேட்கிறார் :
"அத கேன ப்ரயுக்த : அயம் பாபம் சரதி பூருஷ :
அநிச்சண்ட அபி வார்ஷ்ணேய பலதிவ நியோஜித "
(ப.கீ.3-36)

பொருள்: "கிருஷ்ணா,மனிதன் பாவங்களை ஏன் செய்கிறான் ? பாவங்களில் இருந்து விலகி செல்ல வேண்டும் என்று நினைத்தாலும்,சென்றாலும் பாவம் செய்யுமாறு எதனால் தூண்டபடுகிறான் "

பரமாத்மா கிருஷ்ணர் அழகாக  பதிலுரைக்கிறார்  :
"காம ஏஷ க்ரோத ஏஷ  ரஜோ குணா சமுத்ப:
மகாயத : மகாபாப்மா வித்தி ஏனம் இஹா வைரிணம்"
(ப.கீ.3-36)  
பொருள்:"அர்ஜுனா! ரஜோகுனத்தினால் உருவாகும் காமம்,குரோதம் (தீராத கோபம்) இந்த இரண்டே பாவங்களுக்கு காரணமாக அமைகின்றன ".

இங்கு கூறப்பட்டுள்ள காமம் என்பது உடல் இச்சை மட்டுமல்ல முன்பு ஏற்பட்ட அனுபவத்தால் ஒரு பொருளுக்காக ஏங்குதல்,அந்த பொருளை பற்றி நினைக்கும் போது அல்லது கேட்கும்போது உண்டாகும் ஏக்கம் (தீராத ஆசை) என்பதாகும்.
அப்படிப்பட்ட இந்த காமம் இரண்டு வகைப்படும்

ஒன்று "இந்திரியம் விஷய கவர்ச்சி மூலமாக உண்டாவது இது இயற்கை"

மற்றொன்று, "மனம் மூலமாக கவர்ச்சி ஏற்பட்டு,மனதின் ஏக்கத்தால் உருவாதல்"
இரண்டாவதாக வரும் காமத்தை (காம எண்ணத்தை) போக்கிட முடியும்.
முதலாவதாக இருக்கும் தன்மையானது பூர்வஜென்ம வாசனை, பூர்வ செயல்கள் காரணமாக ரஜோ குணம் தலை தூக்கும் அப்போது நமக்கு மிகுந்த காமம் உண்டாகிறது! 

செல்லேறும்புகள் பெரும் புற்றை எழுப்புவது போல ஒவ்வொரு நொடியும் காமம் நமக்குள் பெரும் திரளாக எழ காத்து கொண்டுருக்கும். அப்படி எழும் காமத்தை அடக்கும் போதோ - யாரவது அந்த எண்ணத்தை அடையமுடியாமல் எதன் மூலமாவது தடைபடும் போதோ, யாரவது தடுத்தாலோ கோபம் வரும் அந்த கோபம் நாளடைவில் குரோதமாக மாறுகிறது. 
காமம் ஏற்படும்போது மயில்கூச்சல் எடுக்கும், கண்கள் விரியும், முகம் மலரும்(இது காதலர்களுக்கும் ஏற்படும்).
இந்த காமத்தினால் விளைவுகள் என்று பார்த்தால் :
*வேட்டை
*கவறல்
*பகல்துஞ்சல் 
*வம்பாடல்
*பெண்களுடன் குலவுதல் 
*குடித்தல்
*கூத்து 
*பல்லியம்
*இவற்றில்  மயக்கம்    
*மனம் போனபடி அலைதல் 
கொழுந்து விட்டு எரியும் நெருப்பு விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறது, அது போல காமம் என்ற பெரும் நெருப்பு மனிதனின் அனைத்து நற்குணத்தையும் நொடிபொழுதில் பொசுக்கிவிடும்.
அப்படி காமத்தினால் எழும் குரோதம் வந்தால்:
உடல் நடுக்கம்,
வியர்வை,
உதடு  கடித்தல்,
கண்சிவக்கும்.
இந்த குரோதத்தினால் விளைவுகளாவது எட்டு ஆகும் :
*கோள்
*பொய்த்துணிவு
*இரண்டகம்
*பொறாமை
*பிறர் நலம் சகியாமை 
*பிறன் பொருள் விழைதல் 
*காரணமின்றி ஒறுத்தல்
*வசை கூறல்  
" குரோதம் வந்தால் குழப்பம் வரும்
குழப்பம் வந்தால் குணம் மாறும்"
இந்த வழிபோக்கன் பயணத்தை தொடங்குகிறேன்.. மீண்டும் ஓய்வு எடுக்கும் போது சந்திப்போம்..


புதன், 6 ஜூலை, 2011

இதில் என்ன இருக்கும் நிச்சயம் எனக்கு தெரியாது...

"ஒரு வழிப்போக்கன் தான் போகும் இடத்தை அறியமாட்டான் ஆனால், செல்லும் வழியை அறிவான் அது போல் தான் நானும்... "

இலக்கியத்துடன் எழுத நான் இலக்கியவாதி அல்ல;

கோர்வையாக எதுகை, மோனையுடன் எழுத எழுத்தாளனும் அல்ல;

கரகோஷம் வாங்க பேசும்,எழுதும் அரசியல்வதியும் அல்ல...

உழைப்பாளியின் வியர்வைகளில் உயரும் வணிகனும் அல்ல..

மக்களிம் அச்சத்தை பயன்படுத்தும்
போலிமதவாதியும் அல்ல..

அதற்காக, நான் நாத்திக வாதியும் அல்ல..

எதுவும் நான் இல்லை என்றால் பின் நான் யார்?

தேடலிம் விடை தான் என்ன?

இதோ நான் யார் கண்டு பிடிக்க சிறு குறிப்பு

" நான் ஒரு வழிப்போக்கன் சற்று இளைப்பாற ஓர் உடலை தேர்ந்து எடுத்து இப்போது உங்களுடன் உங்களுக்காக எழுதுகிறேன் எழுதபோறேன்... "

உங்கள் கண்களுக்காக வழிபோக்கனாய்

உங்கள் எண்ணங்களுக்கு எட்டாத விழி பொயயனாய்

உங்கள் அனைவருள்ளும் மெய்யின் மெய்யாய்

இருக்கும் நான் மட்டுமே உண்மை ஆன்மா

இதில் என்ன இருக்கும்... எதுவும் இருக்கும்...

நடுநிலையுடன்....

யாரையும் புண்படுத்த அல்ல ; நம்மை பண்படுத்த...

பொழுதுபோக்கு அல்ல ; பழுது பார்க்க...

என்கருத்துகள் தீர்வை தருவதல்ல.. பார்வையை தர....

வாருங்கள் இந்த வழிபோக்கனுடன் பயணியுங்கள்....
ஒரு காட்டில் வேடன் மற்றும் அவனின் மனைவி - ஒரு வயது குழந்தையும் வசித்து வந்தார்கள்..

வேடனுக்கு ஒருநாள் விலங்குகளே கிடைக்கவில்லை அவனும் பசி குடிசையில் மனைவி-குழந்தையும் பசி ... என்ன செய்வது என்று தெரியாமல் மரத்தின் மீது ஏறி பார்த்துகொண்டு இருந்தான் இரைக்காக!

மான்கள் கூட்டம் ஒன்று தண்ணீர் குடித்து விட்டு சென்று கொண்டு இருந்தது அப்போ தாய், மான் குட்டிகளை வழி மாறாமல் இருக்க அதட்டி கொண்டே போனது. அதில், ஒரு மான் மட்டும் தாய் சொல்லை காதில் போடாமல் வழி மாறியது...
அந்த மான் வருவதை வேடன் பார்த்துவிடுகிறான் அம்பை விடுகிறான் குறி தவறி விடுகிறது..
மான் ஓடுகிறது..
வேடன் துரத்துகிறான்..
நேரம் போகிறது..
மானுக்கு உயிர் மீது பயம் ஓட்டம்.. வேடனுகோ பசி தன் குடும்பமோ பசியால் உள்ளது பசி போக்க மான் வேண்டும் என்கிற ஓட்டம்..மானோ ஒரு புதரில் மறைந்தது.. வேடன் தேடுகிறான்.. அங்கே முனிவர் தவம் கோலத்தில் தியானம் பண்ணுகிறார். வேடன் அவரிடம் கேட்கிறான் அவரோ மௌனமாக இருக்கிறார்.. மானோ நிம்மதி அடைகிறது உடனே அந்த புதரில் இருண்ட கீரிப்பிள்ளை தன் எதிரி தான் இது என்று நினைத்து கத்துகிறது அதுக்கு அச்சம் கொண்டு மான் வெளிய வருகிறது.
வேடன் அந்த மானை கொள்கிறான்..

இந்த கதை பாவம் என்ற தலைப்பில் சொன்னானே அதுக்கு அல்ல; அடுத்த தலைப்பான விதி-சூழ்நிலை-காலம் முன்னோட்ட கதை ஆகும்.