ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ஆனந்தம்..ஆனந்தம்..ஆனந்தம்

முடிந்ததை செய்வோம் முடிவதற்குள் ...

இறைவன் ஆனந்த மயமானவன் ... அவனிடமிருந்து வந்த நாமும் நம்மை போல உள்ள உயிர்களும் ஆனந்த மயமனவைதான்... பால் சார்ந்த பொருளில் இருந்து உருவான உணவுகளுக்கு பாலின் குணம் இருப்பது எந்த அளவு உண்மையோ அதே போல் இறைவனிடம் இருந்து உருவான உயிரேகளுக்குள்ளும் ஆனந்தம் நிரம்ப  உள்ளது...

இதை அறிய விடாமல் தடுப்பது என்னது? ஒரே வார்த்தை அது தான் "அகங்காரம்" ( நான் - தான் - என் - என்னுடைய - என்னால் - தன்னால் ).

ஒரு வியாபாரி தன்னிடம் இருந்த வயது அதிகம் ஆனா குதிரையை  கசாப் காரனுக்கு  விற்க சென்றான் குதிரையுடன்..  இந்த விஷயம் குதிரைக்கு தெரியாது எப்பவும் போல கொண்டு போகிறான் என்று தான் நினைத்து இருந்தது.. பின் நேரம் செல்ல செல்ல வியாபாரி வேற பாதையில் செல்வதை உணர்ந்த குதிரை அவனை கவனமாக கவனித்து பின்புதா தெரியவந்தது.  தன்னை இவன் கசப்கரனுக்கு விற்க போகிறான் என்று... அதன் பின் முரண்டு பிடித்தது வியாபாரியல் முடியவில்லை... குதிரை ஓடுகிறது கத்துகிறது அதை அடக்க இவனால் முடிய வில்லை.. பின் குதிரையை அழைத்து கொண்டு தன வீட்டுக்கு சென்றுவிடுகிறான்... இதை போல பல நாட்கள் நடக்கிறது... ஒரு நாள் வியாபாரி வைராக்கியத்தோடு எப்படியோ அதை கசப்கரனிடம் ஒப்படைப்பது என்ற எண்ணத்தில் கொண்டு செல்கிறான்.. இந்த முறை அவன் பல உபகரனுடன் செல்கிறான் குதிரையுடன்.. இந்த முறை குதிரை என்னனவோ பண்ணுகிறது முடியவில்லை இறுதியில் குதிரை விற்றுவிடுகிறான்... அந்த கசாப்காரனிடமும் முரண்டு பிடித்து இறுதியில்   காட்டுக்குள் ஓடிவிடுகிறது....

நம்மிடமும் அகங்காரத்தை வளர்ப்பது  எது ? " இந்த குதிரையை போல நம்மிடம் முரண் பிடிக்கும் கோபம்>காமம்(தீராத ஆசை என்றும் பொருள்படும்)... இவைகளே ஆகும்... இவைகளால் மொத்தம் 18 தன்மைகள் உருவாகின்றன இதை நாம் சென்ற பயணத்தில் கண்டோம்.
நாமும் மிகுந்த வைரகியதொடு அந்த வியாபாரியை போல இருந்து இவைகளை நமது கட்டுபதுகுள் கொண்டுவரவேண்டும் அதுக்கு மனதை கட்டுகோள் கொண்டு வரவேண்டும்..
ஆனால் ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும் " மனதை அடக்க நினைதல் நம்மை அழிக்கும்; அறிய நினைதல் குழப்பும் அதனால் தட்டி கொடுக்க  வேண்டும் " அப்படி பன்னல் மட்டுமே மனம் அடங்கும் .
எங்கே ஆனந்தம் என்று ஓடாமல் ஆனந்தத்தை நமக்குள் வரவைக்க வேண்டும். எப்படி வரவைப்பது வா என்றால் வராது  ஆனால் எளிமையாக வரவைக்கலாம் ...
நம்முடைய  செயல்களே நம்  எதிர்காலத்தை நிர்ணகிறது...
இன்று நாம் ஒரு தவறோடு அறிந்து விளையாடினால் அந்த தவறு காலத்தினால் குறிப்பெடுக்கபட்டு எதிர்காலத்தில் நம்முடன் விளையாடும்...
இதை உணர்ந்து செய்யவேண்டாததை  செய்யாமல் இருப்பதே நலம்..
எளியவழி ஆனந்தத்தை நம்முள் வரவைக்க..
" யார் ஒருவர் இந்த உலகில் உள்ள அனைத்திலும் , உயிர்கள் அனைத்திலும் சர்வம் இறை மயமாக காண்கிறானோ அவனுக்குள் ஆனந்தம் பொங்கும் அவன் இருக்கும் இடம் சொர்க்கமாகும் அவன் செல்லும் இடமெல்லாம் அமைதி பரவும் சந்தோசம் பெருகும் " இது சத்தியமான உண்மை...
என் பரம்பொருள் மீது சத்தியம்.
சர்வம் இறை மயம் மட்டுமே அனைத்தையும் பெறவும் பெருகவும் வைக்கும்..
நீங்கள் காண்பவர்களிடமும் - உங்களை எதிர்பவர்களிடமும் சொல்லுங்கள்
உங்களுக்குள் உங்களுக்காக "சர்வம் இறை மயம் " என்றும்
உங்களை எதிர்பவர்களிடம் மற்றும் உங்களை வெறுப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை நினைத்து அவர்களுக்காக உங்களுக்குள் சொல்லுங்கள் " அனைத்தும் பெருக : அனைத்தும் பெறுக"
இந்த மந்திரம் செல்வதையும் உங்கள் மனநிம்மதியையும் வரவைக்கும்...
-






கருத்துகள் இல்லை: